To present the Bible, the word of God, in a pleasant manner that provoke and enthusiasm in the reader to know the Excellency of the knowledge of Jesus Christ our Lord.
வேதாகமத்தை உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் படிப்பதற்கு வேதாகமப் போட்டிகள் ஓர் சிறந்த முறையாகும். நீங்கள் இம்முறையைத் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே. உங்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்.
வேத வசனங்கள் ஒவ்வொன்றும் ஒரு முத்து அதுதான் வாழ்வின் சொத்து
அன்றாடம் நமக்குச் சத்து
இது இல்லையென்றால் பிடிக்கும் பித்து
அவர்களே வாழ்க்கையில் படுவார்கள் குத்து
அதனால் அவர்கள் வாழ்க்கை செத்து
நாம் சாகாமல் பிழைத்திருந்து ஆண்டவரின் வார்த்தைகளை ஆராயவும் அவைகளால் நித்திய ஜீவனை அடையவும் இப்போட்டிகள் நிச்சயமாய் உங்களுக்கு உதவும்.
நோக்கம் :
வேத வாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது, தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியைஞ் செய்யத் தகுதி உள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்திற்கும் கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும் நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனம் உள்ளவைகளாய் இருக்கிறது.
செயல்பாடு :
வேதாகமத்தின் 66 புத்தகங்களையும் 50 பாகங்களாக பிரித்து, அவை ஒவ்வொன்றிலும் 1000 கேள்வி பதில்கள் என்று இலகுவாக்கி, எளிமையாகப் படிக்கச் செய்வதே இதன் சிறப்பு அம்சமாகும்.
உதாரணமாக : ஆதியாகமம் 1000 கேள்வி பதில்கள்
யாத்திராகமம் 1000 கேள்வி பதில்கள்
சான்றிதழ் :
ஒவ்வொரு தேர்வு எழுதிய உடன் உங்கள் மதிப்பெண்ணிற்கு ஏற்ப E-சான்றிதழ் வழங்கப்படும். அனைத்துத் தேர்விலும் வெற்றி பெற்று இப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு பட்டபடிப்பு BBS சான்றிதழ் நேரிலோ அலலது இணையம் வழியாகவோ வழங்கப்படும்.